Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : தொல்காப்பியரின் எழுத்தெண்ணிக்கை கோட்பாடும் பிற்கால யாப்பிலக்கண வளர்ச்சியும்
Article Information : Volume 2 - Issue 2 (November - 2018) , 27-34
Affiliation(s) : Assistant Professor

Abstract :

தமிழ் இலக்கண வரலாறு நீண்டதொரு பாரம்பரியத்தை உடையது. அதாவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இலக்கண இலக்கியங்கள் இருந்தமைக்கான சான்றுகளைத் தொல்காப்பியர் தான் எழுதிய தொல்காப்பியத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் இலக்கணம் பல பிரிவுகளைக் கொண்டு வளர்ச்சி பெற்றிந்தாலும் அவை அனைத்தும் தொடர்ச்சியான வளர்ச்சி பெற்றுள்ளனவா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆனால், தமிழ் யாப்பிலக்கணம் தொல்காப்பியருக்கு முன்பிருந்து தற்காலம் வரை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதை, யாப்பியல் சார்ந்து நடைபெற்றுள்ள ஆய்வுகளை உற்றுநோக்கும் பொழுது அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் தொல்காப்பியர் கூறும் எழுத்தெண்ணிக்கை கோட்பாட்டை கொண்டு பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் நிகழ்த்தியுள்ள முயற்சிகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.


Keywords : யாப்பிலக்கணம்
Document Type : Research Paper
Publication date : November 10, 2018