Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : லிமரைக்கூ வடிவத்தின் முன்னோடி ஐங்குறுநூற்றுப் பாடல்களே
Article Information : Volume2 - Issue1 (June - 2018) , 77-82
Affiliation(s) : Assistant Professor

Abstract :

தமிழ் கவிதை வடிவம் சங்க காலம் தொடங்கி இன்று வரை பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது. அவ்வகையில் தமிழ் கவிதை வடிவத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு சிற்றிலக்கிய காலம் வரை மேலோங்கியும் அதைத் தொடர்ந்து மேலைநாட்டு இலக்கிய வரவின் காரணமாக யாப்பிலக்கணம் செல்வாக்கு இழந்து புதுக்கவிதையின் செல்வாக்கு மேலோங்கி காணப்படுவதும் நாம் அறிந்த ஒன்றே. இவற்றைத் தொடர்ந்து தமிழில் ஹைகூ, லிமரிக், சென்றியூ, லிமரைக்கூ போன்ற கவிதை வடிவங்கள் இடம்பெறத் தொடங்கின. இவ்வகைகளில் லிமரைக்கூ கவிதை வடிவம் ஆங்கிலத்தில் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வடிவத்தின் முன்னோடி பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூற்றுப் பாடல்கள் என்பதை நிறுவுவதாக இக்கட்டுரை அமைகின்றது.


Keywords : கவிதை இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : June 02, 2020