Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : வல்லிசை : தீண்டாமை ஒழிப்பும் சாதி மறுப்பு சிந்தனையும்
Article Information : Volume 2 - Issue 2 (November - 2018) , 35-41
Affiliation(s) : Assistant Professor

Abstract :

‘வல்லிசை’ – எழுத்தாளர் அழகியபெரியவனின் இரண்டாவது நாவல். தலித் சமூக வாழ்வியலின் அரசியலையும் அழகியலையும் தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து கவனப் படுத்திவரும் அழகியபெரியவன், இந்நாவலைப் பறையொழிப்புப் போராட்டத்தை உள்ளடக்கமாகக் கொண்டுஎழுதியிருக்கிறார். “இலக்கியமே புரட்சியை உருவாக்கிவிடும் என்று நம்புவது மாயையே. இந்தியாவிலுள்ள தீண்டாமை மற்றும் சாதி அமைப்பின் கொடுமையான சுரண்டல் முறையினை, அறிதலை நோக்கி மக்கள் விழிப்புணர்வு பெறச் செய்வதுதான் தலித் இலக்கியம் என்கிறார் அர்ஜீன் டாங்களே”.இந்தக் கொள்கையினை மையமாகக் கொண்டு வல்லிசை நாவலில் எதிரொலிக்கும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதி மறுப்பு சிந்தனை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


Keywords : நவீன இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : November 10, 2018