Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : “தாய்த்தெய்வ வழிபாட்டு மரபு எச்சங்கள் : திருப்பத்தூர் வட்டாரக் கள ஆய்வினை முன்வைத்து”
Article Information : Volume 3 - Issue 2 November - 2019) , 15-21
Affiliation(s) : Assistant Professor

Abstract :

ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் பெண் தான் முன்னுரிமை பெற்றுத் திகழ்ந்திருக்கின்றாள். வேளாண்மை உக்தியைக் கண்டறிந்தவளும் பெண்தான் என்பது மானுடவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. தவிர, வளமையின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டாள். இவ்வாறான நடைமுறைகள் இருந்த காலத்தைத் தாய்வழிச்சமூகம் என்பர். அக்காலத்தில் மழை பொழிய வேண்டி வளமைச் சடங்குகள் நிகழ்த்தப்பட்டன. பெண் இவ்வாறு போற்றப்படுவதற்கு ஒரு பொதுவான நம்பிக்கைதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். அது ‘தாய்மை’ . ஓர் உயிரைச் சுமந்து பெற்றெடுக்கும் ஆற்றலைப் பெண் கொண்டிருந்தமையால் பெண் சமூகத்தின் படைப்புத் தன்மை கொண்டவளாக மதிக்கப்பட்டாள். இத்தகு நடைமுறையே பெண் தெய்வமாகவும் வழிபாட்டில் இடம்பெறத் தொடங்கினாள். அவ்வகையில், இக்கட்டுரையானது தாய்த்தெய்வ மரபு எச்சமாக அறியப்படும் மூதேவி குறித்தும் திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற கள ஆய்வில் கண்டறியப்பட்ட மூதேவி சிற்பங்கள் குறித்தும் ஆராய முற்படுகின்றது.


Keywords : தொல்லியல்
Document Type : Research Paper
Publication date : October 30, 2019