Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
| Title | : வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே |
|---|---|
| Article Information | : Volume 2 - Issue 2 (November - 2018) , 1-10 |
| Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
சைவ சமயத்திற்கு அடிப்படையாக விளங்குபவை சைவ சித்தாந்தச் சாத்திரங்களாகும். அச்சாத்திரங்களுக்கு அடிப்படையாக விளங்குவன திருமுறைகள். இவற்றுள் காலத்தால் பிற்பட்ட பெரியபுராணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன், பின் வாழ்க்கையும் வரலாற்றையும் தத்துவங்களையும் உள்ளடக்கிய காலப் பேழையாக விளங்குகிறது. காலத்தால் முந்தைய கண்ணப்பர், காரைக்கால் அம்மையார் எனச் சேக்கிழாருடைய காலத்திற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அடியார்களின் வரலாறு தொடங்கிப் பல்லவர்கள், சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் வரை தொடர்புபடுத்தியதோடு திருவுந்தியார் முதலாகச் சங்கற்ப நிராகரணம் ஈறாகிய பதினான்கு நூல்களாகிய சைவ சித்தாந்தச் சாத்திரங்கள் தோன்றுவதற்குச் சேக்கிழாரே அடிகோலுகின்றார்.
| Keywords | : சொல்லாராய்ச்சி |
|---|---|
| Document Type | : Research Paper |
| Publication date | : November 10, 2018 |